Thursday, November 15, 2018

03-12-2018 முதல் காலா வரையற்ற வேலை நிறுத்தம் -AUAB அறைகூவல்

அன்பார்ந்த தோழர்களே,
14.11.2018 அன்று புது டெல்லியில் கூடிய AUAB கூட்டத்தில் ஊதிய மாற்றம், 4G ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் இதர பிரச்சனைகளை நிறைவேற்றக் கோரி 03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல 03.12.2018 முதல் அரசின் திட்டங்களான NOFN, NFS மற்றும் LWE ஆகிய திட்டங்களையும் புறக்கணிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நமது நியாயமான உரிமையான ஊதிய மாற்றத்தை வென்றடையவும், உயிரினும் இனிய BSNL நிறுவனத்தை பாதுகாப்பதற்கும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராவோம். 03.12.2018லிருந்து கால வரையற்ற வேலைநிறுத்தம். இது ஒன்றே நமது; கோரிக்கைகளை வென்றடையச் செய்யும்.
நமது ஒன்றுபட்ட சக்தியினை அரசுக்கு உணர வைப்போம். நமது கோரிக்கையினை வென்றடைவோம்.