BSNL ல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, சமவேலைக்கு சமசம்பளம், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 22.02.2017 அன்று டெல்லியில் பாராளுமன்றம் நோக்கி பேரணி செல்ல, BSNLCCWF சங்கம் அறைகூவல் கொடுத்திருந்தது.
அதன்படி, நமது மாவட்டத்திலிருந்து 34 தோழர்கள் டில்லிக்கு பயணத்தை துவக்கினர். மாநில அமைப்பு செயலர் தோழர் பாபு மற்றும் மாவட்ட அமைப்பு செயலர் தோழர் வரதராஜன் தலைமையில், தோழர்கள், 19.02.2017 அன்று புறப்பட்டனர்.
BSNLEU தர்மபுரி மாவட்ட சங்கம் சார்பாக மாவட்ட செயலர் தோழர் P . கிருஷ்ணன் தோழர்களை வாழ்த்தி, வழி அனுப்பி வைத்தார். போராட்டம் வெற்றி பெற தர்மபுரி மாவட்ட BSNLEU சங்கத்தின் நல் வாழ்த்துக்கள்.